இராமநாதபுரம், மே 28- இராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மே தினப் பேரணி மே 28 சனிக்கிழமையன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா செயலாளர் சிவா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆரோக்கிய நிர் மலா மற்றும் ஜஸ்டின், தாலுகாக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். தொடர்ந்து தாலுகா குழு உறுப் பினர் அசோக் தலைமையில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை உள்ளிட்டோர் பேசினர். 20 இடங் களில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.