districts

img

வத்திராயிருப்பில் மே தின ஊர்வலம் -பொதுக்கூட்டம்

திருவில்லிபுத்தூர், மே 28- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வத்திரா யிருப்பு ஒன்றிய கமிட்டியின் சார்பில் மே தின ஊர்வலம்  பொதுக்கூட்டம் நடை பெற்றது. வத்திராயிருப்பு நுழைவு  வாயில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முத்தாலம்மன் திடலில் முடிவடைந்தது முத்தாலம்மன் திடலில்  நடைபெற்ற பொதுக்கூட் டத்திற்கு வத்திராயிருப்பு நகரச்செயலாளர் பழ னிச்சாமி தலைமை வகித்  தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரை சிறப்பு ரையாற்றினர் மாவட்டச்  செயலாளர் கே.அர்ஜு ணன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டி யன், மாவட்டக் குழு உறுப்பி னர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் பெனரி , சிஐடியு சாலைப்போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் திருமலை ஆகி யோர் பேசினர். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள்,   சிஐ டியு சங்கங்களின் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .முன்ன தாக புயல் கலைக்குழு வினரின் கலை நிகழ்ச்சி களும் உள்ளூர் சிலம்பாட்ட மும் நடைபெற்றது.