சிஐடியு அப்பளத் தொழிலாளர் சங்கம், கட்டுமானத்தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்றுவிழா மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் நடைபெற்றது. அப்பள தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பாலமுருகன் தலைமை வகித்தார். சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.சுப்பையா, ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்டச் செயலாளர் எம்.சிவபெருமான் ஆகியோர் பேசினர். முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.