districts

img

மாவீரன் பகத்சிங் 115 ஆவது பிறந்த தின உறுதிமொழியேற்பு

விருதுநகர், செப்.28- சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி பகத் சிங்கின் 115 வது பிறந்த நாளையொட்டி விருதுநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் பாத்திமா நகரில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர்க்குழு உறுப்பி னர்  சத்யா தலைமையேற்றார்.  நகரத் தலை வர் பொன்பாண்டி சங்கக்கொடியை ஏற்றி வைத்தார்.  மாவட்ட செயலாளர் எம்ஜெய பாரத் உறுதிமொழியை வாசித்தார். மேலும் இதில் டேனியல், மாரிக்கனி, சத்திய ஜித், விஜயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராஜபாளையம்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ராஜபாளையம் நகர் சோழராஜபுரம் கிலையின் சார்பில்  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர பொருளாளர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கணே சன், இந்திய மாணவர் சங்க துணை தலை வர் ஜோ வின்சன் பிரபா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பி னர் ஜெகன், மாதர் சங்க நகர செயலாளர் மேரி மாற்றுத்திறனாளிகள் சங்க தலை வர் சரவணன் உட்பட மாணவர்கள், இளை ஞர்கள் என  பலர் பங்கேற்றனர்.