districts

img

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரித்திடுக!

திண்டுக்கல், ஜுலை 21- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக பணியில் உள்ள நீதிபதிகளைக் கொண்டு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடை பெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தன் திண்டுக்கல் மாவட்ட  12 ஆவது மாநாடு புதன் மற்றும்  வியாழக்கிழமைகளில் திண்டுக் கல்லில் நடைபெற்றது. சங்கக் கொடியை மாவட்டக்குழு உறுப்பி னர் பி.வள்ளியம்மாள் ஏற்றி வைத்  தார். மாநாட்டிற்கு மாவட்டத்தலை வர் எம்.ஜானகி தலைமை வகித்  தார். வரவேற்புக்குழு தலைவர்  டாக்டர் அமலாதேவி வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.பழனியம்மாள் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் கே.பால பாரதி துவக்கி வைத்துப் பேசி னார். மாவட்டச்செயலாளர் ஜி. ராணி அறிக்கை சமர்ப்பித்தார். மாநி லச் செயலாளர் ஆர்.சசிகலா, பேரா சிரியர்கள் பாலசுந்தரி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக பேராசிரியர் சோ.மோகனா, திருநங்கை குணவதி, சக்திக்கலை  குழு ஃபெல்சி, வாலிபர் சங்க மாவட் டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் பி.வசந்தாமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  தீர்மானங்களை முன்மொழிந்து மாநிலக்குழு உறுப்பினர் ஆர். வனஜா, மாவட்ட துணைச்செயலா ளர் பாண்டியம்மாள் பேசினர். மத்தியக்குழு உறுப்பினர் வி. பிர மிளா நிறைவுரையாற்றினார். நக ரச்செயலாளர் ராஜேஷ்வரி நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்

 மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஏ.சுமதி, மாவட்டச்செயலாளராக கவிதா, பொருளாளராக பாண்டியம்மாள், துணைத்தலைவர்களாக ஜி.ராணி, எஸ்.பழனியம்மாள், ஆர்.வனஜா, துணைச்செயலாளர்களாக வி. சுமதி, பாப்பாத்தி, ராஜேஷ்வரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். 23 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண் டும் துவங்க வேண்டும். 2 கேஸ் சிலிண்டர் இருந்தால் முதியோர் பென்சனை நிறுத்த வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவை திரும்பப்பெற வேண்டும். மின் கட்டண உயர்வை கடுமையாக உயர்த்தியதை வாபஸ் பெற வேண்  டும். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பணித்தளங்களில் விசாகா கமிட்டி  அமைக்க வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்  கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.            (ந.நி.)