மேலூர், ஆக.29- மேலூர் அரசு மருத்துவ மனையில் பிரதமரின் ஆயுஷ் மான் பாரத் மருத்துவத் திட் டத்தின் கீழ் நடைபெறும் கட்டு மானப் பணிகளை மதுரை தொகுதி மக்களவை உறுப் பினர் சு.வெங்கடேசன் ஆய்வு செய்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கொட்டாம்பட்டி-மேலூர்-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் தாலுகாகவில் நாளொன்றுக்கு நான்கு விபத்துகள் மாதத்துக்கு 130 வாகன விபத்துகள் நேரிடு கின்றன. இதில் பாதிக்கப் பட்டவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற வேண்டி யுள்ளது. விபத்து நடந்த பிறகு மருத்துவமனைக்கு போய்ச் சேர 45 முதல் 50 நிமி டங்கள் ஆகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் மரணம டைய நேரிடுகிறது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மொத் தம் ரூ.202 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. அதில் மது ரைக்கு ரூ.22 கோடி கிடைத் துள்ளது. இது ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கப் பட்ட நிதியில் பத்துசதவீதம். மேலூர் மருத்துவமனையை மேம்படுத்துவதற்காக மக்களவை உறுப்பினர் என்ற முறையில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே தொடர்ந்து எடுத்த முயற்சி யின் பலன் இன்று வெற்றி யடைந்திருக்கிறது. கீழ் ரூ.22 கோடி மதிப்பில் நான்கு தளங்களில் 50 படுக்கைகள் கொண்ட கட்டடங்கள் கட் டப்படுகின்றன. ஸ்கேன் வசதிகள் செய்யப்படுகிறது.
தவிர நேஷனல் ஹெல்த் மிஷன் மூலம் ரூ.9 கோடி மதிப்பில் 100 படுக்கை வசதி களுடன் கூடிய கட்டடமும் கட்டப்பட்டு அதன் பணிகள் 50 சதவீதம் வரை நிறைவ டைந்துள்ளது. இந்த ரூ,9 கோடியில் 60 சதவீதம் ஒன் றிய அரசும் 40 சதவீதம் மாநில அரசும் வழங்குகிறது இந்தப் பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் போது, விபத்து மரணங் கள் தடுக்கப்படும். மக்களுக்கு உடனடி நவீன சிகிச்சை வசதி களும் கிடைக்கும். பெரும் பாலும் மேலூர் தாலுகா மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதிருக்காது. அனைத்து வசதிகளும் மேலூரிலேயே கிடைக்கும். அதிக விபத்துக்கள் நடக்கும் ஏழு இடங்களில் இடங் களில் தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணையம் மூலம் ஏழு பாலங்கள் கட் டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முடியும் தருவா யில் உள்ளது. மேலூர் மருத்துவமனை மேம்பாடு, பாலங்கள் கட்டு மானப் பணிகள் அனைத்தும் மக்களுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதம். இது எங்களின் தொடர் முயற் சிக்கு கிடைத்த வெற்றியின் சான்றாகும். இந்த ஆய்வின் போது, மேலூர் அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் ஜெயந்தி, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியா ளர் ரகுநாதன், மேலூர் நகர் மன்றத் தலைவர் முகமது யாசின், மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் வெங்கடா சலம், மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், தாலுகா செய லாளர் எம்.கண்ணன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.