நாகப்பட்டினம், ஜன.15 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட உள்ள கீழ்வேளூர் வேளாண் கல்லூரி வகுப்பறை களை வீ.பி.நாகைமாலி எம்எல்ஏ ஆய்வு செய்தார். கீழ்வேளூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட குருக்கத்தி ஊராட்சி யில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைவதற்கான வகுப் பறை தயார் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கீழ்வேளூர் பகுதியில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என நாகைமாலி பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி அரசின் ஒப்புதல் பெற்று வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 2011-2016 இல் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினராக நாகைமாலி இருந்தபோது திமுக அரசானது கீழ்வேளூர் பகுதியில் ஒரு வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கரு ணாநிதி அறிவித்தார். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே ஆட்சி காலம் முடிவடைந்துவிட்டது. அதற்குப் பின்பு வந்த அரசு அதை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டது. இந்நிலையில் அதே தொகுதியில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட நாகைமாலி வெற்றி பெற்ற பிறகு, அப்பணிகள் துவங்கப்பட்டு வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளது. வரும் கல்வியாண்டில் கீழ்வேளூர் வேளாண் கல்லூரி செயல்படுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதை யொட்டி அதற்கான வகுப்பறைகளையும், மாணவர்கள் தங்குவதற்கான விடுதி அறை களையும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பார்வையிட்டார்.