districts

img

எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

தேனி, மார்ச்.11- ஒன்றிய அரசு எல்ஐசி பங்குகளை தனி யாருக்கு விற்பதை எதிர்த்து பெரியகுளம், இராமநாதபுரத்தில் எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு கிளைத் தலைவர் டி.பி.சரவண குமார் தலைமை வகித்தார். இந்தியாவுக் கான மக்கள் இயக்கத் தலைவர் மு.அன்புக் கரசன் ஆதரித்துப்  பேசினார். கிளைச் செய லாளர் மு.அகமது ஆதம் நன்றி கூறினார். இதில், பெரியகுளம் கிளை ஊழியர்கள், முகவர்கள், பாலிசிதாரர்கள், தற்காலிக பணியாளர்கள் பங்கேற்றனர்.  இராமநாதபுரம் இராமநாதபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செய லாளர் எம்.சிவாஜி தலைமை வகித்தார். காப்பீட்டுக் கழக சங்க கிளைச் செயலாளர் டி.முத்துப்பாண்டி, தலைவர் சைமன், டி.முத்துபாண்டி மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் பேசினர்.