தேர்வு வினாத்தாள் பயனற்றதாக உள்ளது : உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
மதுரை, அக் 18- மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதி மன்ற நீதிபதிகள், பள்ளி தேர்வுக ளிலுள்ள வினாத் தாள்கள் மாணவர்க ளின் முன்னேற்றத்திற்கு பயனற்றதாக உள்ளது. இதே நிலை நீடித்தால் தேர்வு வினாத்தாள் அமைக்கும் குழு வினை கலைக்க நேரிடும் என்று எச்ச ரித்துள்ளனர். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பாடத்திட்டத்தில் திருக்குற ளில் 108 அதிகாரங்கள் 1050 குறள்கள் பொருள் விளக்கத்துடன் இடம் பெறக் கோரி மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் பொதுநல வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “2016 உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 1050 திருக்குறள்களை 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் முழு மையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொ ருள்பால் அடங்கிய 108 அதிகாரங்க ளில் 1050 திருக்குறள்கள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க அரசாணை வெளியிட்டது. ஆனால், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத் திட்டத்தில் திருக்குறள் பெயரளவில் மட்டுமே உள்ளது. மொத்தமாகவே 30 முதல் 60 திருக்குறள்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பாடத்திட்டத்திலும் திருக்குறள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பொருள் கொடுக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதும் பொழுதும் திருக்குறள்கள் பெயரளவில் மட்டுமே இடம்பெறுகிறது. திருக்குறள்களையும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க வும், தேர்வில் திருக்குறள் சம்பந்த மான கேள்விகள் இடம் பெறக் கோரி யும் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறள் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 108 அதிகாரங்களில் 1050 திருக்குறள்கள் பொருள் உடன் இடம் பெற உத்தரவிட வேண்டும். மேலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை திருக்குறளில் உள்ள 108 அதிகாரங்களையும் மாண வர்களுக்கு கற்பிக்க உத்திரவிட வேண்டும்.தேர்விலும் திருக்குறள்கள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெற உத்தரவிட வேண்டும்.” என்று தெரி வித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாரா யண பிரசாத் அமர்வு முன்பு செவ்வா யன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகை யில், திருக்குறள் இளைய சமுதா யத்தை நல்வழிப்படுத்தக் கூடியது. 1000 திருக்குறளில் 5 திருக்குறள்களின் பொருளை மாணவர்கள் உணர்ந்தாலே அவர்களை நல்வழிப்படுத்த முடியும். மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பெற்றோரையும், ஆசிரியரையும் தாக்கும் சூழ்நிலை உள்ளது. மாண வர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம். திருக்குறளில் 108 அதிகாரங்களில் 1050 குறள்களை மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும் என 2017-ல் அரசாணை உள்ளது. அதனை ஏன் சரிவர பின்பற்ற வில்லை. தற்போது நடைபெறும் பள்ளி தேர்வுகளிலுள்ள வினாத் தாள்கள் மாணவர்களின் முன்னேற் றத்திற்கு பயனற்றதாக உள்ளது. இதே நிலை நீடித்தால் தேர்வு வினாத்தாள் அமைக்கும் குழுவினை கலைக்க நேரிடும். திருக்குறள்கள் பாடத்திட்டத்தில் சரிவர நடைமுறைப் படுத்தாவிட்டால் பள்ளிக்கல்வித்துறை செயலர் ஒவ்வொரு விசாரணையிலும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும். வழக்கு குறித்து தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட னர். வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.