districts

img

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் லட்சுமி நாராயணா திருமண மஹால்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் லட்சுமி நாராயணா திருமண மஹாலில் வியாழனன்று தென்காசி எம்.பி., தனுஷ் எம்.குமார், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஸ் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார். இவ்விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் இராஜம், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஆறுமுகம், வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

;