திண்டுக்கல், செப்.14 அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க தலைவர் கஸ்தூரியின் நினைவு தினத்தை முன்னிட்டு, கிரா மப்புற வேலை திட்டத்தைப் போல கன்னிவாடி பேரூ ராட்சியிலும் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வர வேண்டும் கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் 700க்கும் மேற்பட்ட மனுக்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத் தின் மாநிலச் செயலாளர் ஜி. ராணி, மாவட்டச் செயலா ளர் பாப்பாத்தி, ரெட்டியார் சத்திரம் ஒன்றியத் தலைவர் வளர்மதி, ஒன்றியத் துணைத் தலைவர்கள் சூர்யா, உமா உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதனையடுத்து பேரூ ராட்சி நிர்வாக அலுவலரிடம் மனுக் கொடுக்கப்பட்டது.