districts

img

மீண்டும் பணி வழங்கக்கோரி காமராசர் பல்கலை. தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா

மதுரை, ஜூன் 2- மதுரை காமராஜர் பல்க லைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர் ஓட்டுநர், கணினி மென்பொருள் பரா மரிப்பாளர், இளநிலை உதவியாளர், தோட்டம் பராமரிப்பவர் உட்பட 136 பேரை திடீரென வாய்மொழி உத்தர வின்பேரில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி  பணிநீக்கம் செய்யப்பட்டனர். இத னைக் கண்டித்தும் மீண்டும் பணி வழங்கக்கோரியும் பல்கலைக்கழக வாயில் முன்பாக வியாழனன்று 56-வது  நாளாக அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதி ராஜன் மற்றும் அரசு ஊழியர் சங்க  நிர்வாகிகள், பணி நீக்கம செய்யபட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.