districts

சிறைவாசி உயிரிழந்த சம்பவம் சிறைக் காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு

மதுரை, ஜூலை 24-  தஞ்சாவூர் சிறையில் இளைஞர் மரணம் அடைந்த வழக்கில் சிறைக்  காவலர் உள்ளிட்ட மூன்று நபர் களுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சரவ ணன் என்பவர் கடை முன் நின்று சிகரெட் குடித்த புகாரில் கைது செய்யப்பட்டு கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது (2019-ஆம் ஆண்டு) வலிப்பு நோய் ஏற்பட்டு, தஞ்சாவூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து விசாரித்த தஞ்சாவூர் ஜேஎம்-3 மாஜிஸ்திரேட் சிறைக் காவலர்கள் தாக்கியதால் தான் சரவணன் உயிரிழந்ததாக அறிக்கையளித்தார்.  இதையடுத்து கும்பகோணம் கிளை சிறை வார்டன் இளையராஜா, காவலர் வைரமூர்த்தி, உதவி ஜெயிலர்  சுரேஷ்குமார் ஆகியோர் மீது கும்ப கோணம் கிழக்கு காவல்துறையினர் கொலைக்குற்றம் அல்லாத மர ணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை திங்களன்று நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் முதலில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் அறிக்கைக்கு பின் தீவிரமான குற்றப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிவா ரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள் ளது மனுதாரர்கள் குற்றம் புரிந்துள்ள னர் அவர்களை காவலில் எடுத்து விசா ரிக்க வேண்டியது அவசியம் எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். இதைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு. 

இறந்தவரின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்துள்ளதாகவும், வயிறு உள்ளிட்ட இடங்களில் காய மும், வயிற்றில் ஆங்காங்கே ரத்தத்  திட்டுகள் உள்ளதாகவும் உடற்  கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடுமையான தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பால் தான் இறந்ததாக வும் கூறப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்  டின் விசாரணை அறிக்கையிலும், காயங்களால் ஏற்பட்ட ரத்த இழப்பு  மற்றும் அதிர்ச்சியால் இறந்திருக்க லாம் தலை, மார்பு மற்றும் வயிற்றில் காயங்கள் இருந்தன. அவரது இறப்பு இயற்கைக்கு மாறாணது என வும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய  குற்றவியல் மற்றும் துறைரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.  திருத்தப்பட்ட இறுதி அறிக்கை 2023-ஆம் ஆண்டு ஏப்.19-இல் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை கீழமை நீதிமன்றம்  ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி அறிக்கையில் மனு தாரர்கள் தலைமறைவாக உள்ள தாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் தான் உள்ளனர். பல்வேறு காயங்களால் தான் சம்பந்தப்பட்ட நபர் இறந்துள்ளார் எனவே மனுதாரர்களுக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது. ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு எதிராக கொலைக் குற்றத்தின் கீழ் வழக்குப்  பதிவு செய்து நான்கு வாரத்தில் புதிதாக திருத்தப்பட்ட இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் மாஜிஸ்தி ரேட் அறிக்கையின்படி உரிய துறை ரீதி யான நடவடிக்கையை சிறைத்துறை டிஜிபி மேற்கொள்ள வேண்டும் மாஜிஸ்திரேட் அறிக்கையின்படி மனுதாரர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையினர், அதிகாரிகள் மீது விரிவான விசா ரணை மேற்கொண்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் தஞ்சாவூர்  மாவட்டக் காவல்துறை கண்கா ணிப்பாளர் இந்த வழக்கின் குற்றப்பிரி வுகளை மாற்றம் செய்து உரிய நட வடிக்கைக எடுக்க வேண்டும். இவ் வாறு நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.