districts

சூதாட்ட புகார்: ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

சென்னை,டிச.9- சூதாட்ட புகாரில் நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளி யிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத் தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதன டிப்படையில், ஜீ தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார் ஆகியோருக்கு எதிராக 2014ஆம் அண்டு தோனி சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.  தோனியின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த  மனு மீதான விசாரணை டிசம்பர் 9 வியா ழனன்று நீதிபதி என்.சேஷசாயி முன்பு நடை பெற்றது. அப்போது, இந்த வழக்கில் தற்போது சாட்சி விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர  இன்னும் பல ஆண்டுகள் ஆகும் எனக் கூறி சம்பத்குமாரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சாட்சி விசாரணை யை எதிர்கொள்ள வேண்டும் என சம்பத் குமாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தோனி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

;