மதுரை, செப்.22- மதுரை புறநகர் மாவட் டத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை துவக்க விழா ஹார்விபட்டியில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் என்.விஜயா தலைமை வகித்தார். கண மார்க் செல்வராஜ் வர வேற்றார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், சிஐடியு முன்னாள் நிர்வாகி பி.ஜீவானந்தம் ஆகியோர் பேசினர். மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர அருணன் சிறப்புரையாற்றினார். இதில் அமைப்பின் மதுரை புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக வி.உமாமகேஸ்வரன், இணை ஒருங்கிணைப்பா ளர்களாக வெண்புறா, கண்மார்க் செல்வராஜ், என். விஜயா (மாமன்ற உறுப்பி னர்) புஷ்பராஜ் (காமராஜர் பல்கலைக்கழகம்), காதர் (வண்டியூர்), ஏ.பாலாஜி (அரசு ஊழியர் சங்கம்), பரவை பாலு, ஜீவானந்தம் (சிஐடியு) ஏ.வேல்பாண்டி (விவசாயிகள் சங்கம்) உட்பட 26பேர் தேர்வு செய் யப்பட்டனர்.