districts

img

‘‘எல்லாம் தனியார்மயம் என்றால் அரசு எதற்கு’’

வெம்பக்கோட்டை, மே 30- அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் விற்று விட்டால், ஒன்றிய அரசு எதற்கு இருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் ஆலங்குளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற மேதினப் பேரணி மற்றும் நிதியளிப்புப் பொதுக் கூட்டத் தில் கலந்துகொண்டு எஸ்.கண்ணன் பேசியது:- ஆலங்குளம் சிமிண்ட் ஆலை 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக தமிழக அரசு தற்போது ஆலையை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தி நிதி போதுமானது அல்ல. இந்த  ஆலை மற்றும் அரியலூரில் உள்ள அரசு சிமிண்ட் ஆலையிலும் 200 நிரந்தர மற்  றும் 300 ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் ஒட்டு  மொத்த வருமானம் ஆண்டுக்கு ரூ.250  கோடி. அதேநேரத்தில் தனியார் சிமிண்ட் ஆலையின் ஆண்டு வருமானம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கோடி வரை  உள்ளது. அப்படியெனில் அரசுக்குச் சொந்தமான சிமிண்ட் ஆலைக்கு கூடுத லாக நிதி ஒதுக்கி ஆலையின் வளர்ச்சி க்கு உதவ வேண்டும். அவ்வாறு செய்  தால், இப்பகுதியைச் சேர்ந்த ஏராள மான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சார்புத் தொழில் கள் இப்பகுதியில் பெருகும். தமிழக  அரசு ஆலங்குளம் சிமிண்ட் ஆலைக்கு கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும்.

அதானி, அம்பானி போன்ற பெரும்  பணக்காரர்கள் கொரோனா ஊரடங்கு  காலத்தில் 750 சதவீதம் அளவிற்கு தங்க ளது சொத்துக்களை குவித்துள்ளனர். அதேநேரத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.  நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து நாடே திவாலாகும் நிலையில் உள்ளது. அப்படியொடு நிலை ஏற்ப டால் அதற்கு பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம் பானி, அதானி ஆகிய நால்வர் தான் கார ணம். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடந்த எட்டாண்டுகளில் ரூ.20  லட்சம் கோடியை மக்களிடம் இருந்து  பறிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்கா ரர்களுக்கு வரிச்சலுகை, கடன் தள்ளு படி செய்கின்றனர். சாதாரண ஏழை,  எளிய மக்களுக்கு எதுவும் தருவதில்லை. வங்கி, விமானம், எல்.ஐ.சி, ரயில்வே ஆகியவற்றை தனியாரிடம் விற்று வரு கிறார்கள். எல்லாம் தனியார்மயம் என்  றால் அரசு எதற்காக உள்ளது?  முன்னதாக மேதின பேரணி- நிதிய ளிப்பு பொதுக்கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெரிய சக்கரை தலைமை வகித்தார். எஸ்.சேர்வை முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.முனியசாமி வரவேற்  றார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஏ.குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ரூ.1லட்சத்து 60 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. முத்து  நன்றி கூறினார். முத்துராமலிங்கம், பெரு மாள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.