districts

img

கீழடி 2 ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை ஒன்பது மாதங்களில் வெளியிட வேண்டும்

மதுரை, பிப்.26- கீழடியில் இரண்டாம் கட்ட  அகழாய்வு குறித்த, தொல்லி யல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் அறிக்கையை ஒன்  பது மாதங்களில் வெளியிட வேண்டும் என ஒன்றிய அர சுக்கு சென்னை உயர் நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவிட்டுள் ளது.

“சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசு சார்பில் தொல்லி யல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் அகழாய்வுப் பணி  மேற்கொண்டார். இந்த அக ழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்  நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின் னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் தலை மையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட  அகழாய்வில் குறிப்பிடும்படி யான கண்டுபிடிப்புகள் இல்லை. முதல் இரண்டு கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்  றிய அரசிடம் தொல்லியல் அறி ஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நில விய கலாச்சாரம், விவசாயம்  செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரி வித்துள்ளார்.

கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ  கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தை யது எனத் தெரியவந்துள்ளது. எனினும், முதல் இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த அறிக்கையை ஒன்றிய  அரசு இதுவரை வெளியிடப்பட வில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வர லாற்று முடிவுகள் கிடைக்கும்.

எனவே, கீழடியில் தொல்லி யல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் மேற்கொண்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்” என்று மதுரையைச் சேர்ந்த பிரபாகர் தமது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசா ரணை திங்களன்று நடைபெற் றது. அப்போது நீதிபதிகள், “கீழ டியில் இரண்டாம் கட்ட அக ழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் அறிக்கையை ஒன்பது மாதங்களில் வெளியிட வேண்டும் என ஒன்றிய அர சுக்கு உத்தரவிட்டனர்.