districts

img

அரசு மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப்.28-  மக்கள் நலன்கருதி 1200- க்கும் மேற் பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பட்டய மருந்தாளுநர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் அரசாணை எண்: 5 - ஐ ரத்து செய்திட வேண்டும். மருந்தா ளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தா ளுநர் சங்கம் மதுரை மாநகர் - புறநகர் மாவட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  நகர் கிளை சார்பில் அரசு ராஜாஜி மருத்து வமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட துணை தலைவர் ஆர். செல்வி தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் ஏ. பாஸ்கரன் விளக்கி பேசினார். புறநகர் சார்பில் விஸ்வநாதபுரம் சுகாதா ரத் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்டத் தலை வர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி விளக்கிப் பேசினார் .தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதி ராஜா மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் பரமசிவம், ராமச்சந்திரன், இரா.தமிழ் ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். மாநிலச் செய லாளர் து. முருகன் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் ஏசுதாஸ், மாரி யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.