திருநெல்வேலி, செப்.18- தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பில் பகுத்தறிவு பகல வன் தந்தை பெரியார் பிறந்த நாளன்று பாளையங்கோட்டை பேருந்துநிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமுஎகச நெல்லை மாவட்ட செயலா ளர் ச. வண்ணமுத்து தலைமையில் பழனி, சுப்பிரமணியன், நாராயணன், முருகன் பச்சிராஜன் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.