சின்னாளபட்டி, ஜூலை-15 திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழக புதிய கூடுதல் பொறுப்பு துணைவேந்தராக நிய மிக்கப்பட்டுள்ள புதுச்சேரி பல் கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்கலைக்கழத்தில் உள்ள குளறுபடிகள் மற்றும் குறைகள் நீக்க பாடுபடுவேன். விரைவில் பல்கலைக்கழ கத்தில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும். பல்கலைக்கழ கத்தில் உள்ள பி.எஸ்ஸி வேளாண்மை படிப்புக்கு ஐ.சிஎ. ஆர் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையின் கீழ் கியூட் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கு இடமில்லை. காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் பல்வேறு படிப்புகளில் உள்ள ஆயிரம் இடங்க ளுக்கு 86ஆயிரம் பேர் க்யூட் நுழைவுத்தேர்வு எழுத உள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட வேலைவாய்ப்பு தரும் புதிய படிப்புகள், புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார். பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் முரளிதரன் உடனிருந்தார்.