districts

img

சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி

தேனி, செப்.1- தேனி நகராட்சி சார்பில் சமதர்மபுரத்தில் உள்ள காமராஜர் பூங்காவில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி க்கு நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா தலைமை வகித்தார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலை வகித்தார். ஆணையாளர் கணேசன் வரவேற்றார். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள வண்டி 111 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.