districts

வேலை வாங்கித் தருவதாக போடியில் ரூ.8.40 லட்சம் மோசடி

தேனி , ஜூன் 23- போடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர். தேனி மாவட்டம், உத்தம பாளையம் அருகே கோகி லாபுரத்தை சேர்ந்தவர் பொம்முராஜ் மகன் ராம கிருஷ்ணன். இவர் வேலை தேடி அலைந்து வந்த நிலை யில் போடி தீயணைப்பு நிலைய ரோட்டில் வசிக்கும்  கனகராஜ் மகன் சக்திகுமார் என்பவரை அணுகியுள்ளார். சக்திகுமாரின் சகோதரர்  தலைமைச் செயலகத்தில் பணிபுரிவதாகச் சொல்லி  வேலை வாங்கித் தருவதாக பல தவணைகளில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் வாங்கி யுள்ளார். ஆனால் சக்திக்குமார் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனையடுத்து ராமகிருஷ்ணன் போடிக்கு வந்து சக்திகுமாரை நேரில் பார்த்து பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதில் சக்தி குமார், தந்தை கனகராஜ், தாயார் பேச்சியம்மாள், சக்திகுமாரின் சகோதரர் பாலாஜி ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தும், சாதி பெயரைச் சொல்லியும் திட்டியுள்ளனர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் தேனி  மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் புகார் அளித்தார். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போடி நகர் காவல் நிலையத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்ற னர்.