கடமலைக்குண்டு, செப்.1- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் குறைந்த அளவிலான நீர்வரத்து மட்டுமே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெள்ளிமலை வனப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக புதனன்று காலை திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வழக்கமாக வட கிழக்கு பருவ மழையின் போது மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயி களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கி டையே ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அடுத்த சில நாட்கள் வரை பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என ஒன்றிய நிர்வாகத்தினர் ஊராட்சி நிர்வாகங் கள் மூலம் கிராமங்களில் அறிவுறுத்தி வரு கின்றனர்.