districts

img

தொழில்துறையில் பெண்கள் பங்கேற்பு அவசியம்

மதுரை, மார்ச்.17-  மதுரை பரவையில் உள்ள மங்கையர்க்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி புதனன்று நடைபெற்றது.  இதற்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்தார். இதில், மதுரை மாநகர துணை மேயர் தி. நாகராஜன், ஆணையத்தின் மாநில ஒருங்கிணைப்பா ளர் பேராசிரியர் ஹாஜாகனி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் அருணன், கல்லூரி செயலாளர் அசோக் குமார், கல்லூரி இயக்கு நர் சக்தி பிரனேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முடிந்து வந்தவர்கள் 50 சதவிகிதம் பெண்கள். இன்றைக்கு மக்கள் தொகையிலும் 50 சதவிகிதம் மேல். பெண்கள் .கல்லூரிக்கு செல்கிற போது அந்த கணக்கு மாற ஆரம்பித்து இருக்கிறது .தனியார் பள்ளிகளில் படிக்கிற 96 சதவிகிதம் பெண்கள் கல்லூரியில் சேர்கிறார்கள். ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 46 சதவிகிதம் பேர் தான் கல்லூரியில் சேர்கிறார்கள் என்ற ஏற்றத்தாழ்வு தெரிய ஆரம்பிக்கி றது.

கடினமான போட்டியில் தேர்வு செய்யப்படுகிற கல்லூரிகளில் கூட பட்டப்படிப்பை முடித்துவிட்டு அதற்கு மேல் தொழிலோ, வேலை வாய்ப்பிலோ சேராமல் வீட்டோடு இருந்து விடுகிறார்கள். நீங்கள் எந்த அளவு கல்வி கற்பது முக்கியமோ அதனை விட முக்கியம் ஏதாவது ஒரு தொழில் துறையில் நீங்கள் தடம் பதிக்க வேண்டும். பெண் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை இந்த அரசு ஏற்படுத்தி கொடுத்துள் ளது. பெண்கள் அதிகமாக பணியாற்றும் தொழிற் சாலைகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.அதனை தொடர்ந்து செய்வோம்.கல்வி கற்பதோடு நின்று விடா மல் வேலைவாய்ப்பில் தொழிற் துறையில் பங்கேற்று உற்பத்தி திறனை உயர்த்துகிற வகையில் செய லாற்றுங்கள்’’ என பேசினார். மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் துவக்கி வைத்து பேசுகையில், இந்த நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது. பள்ளிப்படிப்பு முடிக்கும்  மாணவர்கள் பெருவாரியாக கல்லூரி வரை செல்வதில்லை. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அதிகமானோர் மேற்படிப்பிற்கு செல்வ தில்லை. கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் அவர்கள் கூறினார். அப்படி கனவு காண்பவர்கள் தான்  இன்றைக்கு எதிர்காலத்தை நோக்கி நகர்கிறார்கள்’’ என்று பேசினார்.

வாழ்த்திப் பேசிய மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், ‘‘1950ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மதத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியே திரைப்படங்கள் வந்துள் ளன. குறிப்பாக செவாலியர் சிவாஜி கணேசன் நடித்த பாவமன்னிப்பு, ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, அதில் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய நண்ப னின் பெயரை இணைத்து மாணிக் பாட்ஷா என்று பெயர் வைத்து வைத்திருப்பார். அப்படி ஒற்றுமை யை வலியுறுத்திய திரைப்படங்களும் வெளிவந்தது. தந்தை பெரியார், பாரதியார், தோழர் ஜீவா போன்ற வர்களெல்லாம் இந்த மதுரை மண்ணில் சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி பல்வேறு நேரங்களில் பேசியுள்ளார்கள். இன்றைக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. சமூக நல்லிணக்கத்தை நாம் வெளியில் கொண்டு செல்ல வேண்டும். அதை மாண வர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.  பேராசிரியர் ஹாஜாகனி பேசுகையில், ‘‘நம்மு டைய தேசிய கொடியில் காவி, பச்சை, வெள்ளை என்று மூவர்ணம் உள்ளது அதுதான் நம்முடைய ஒற்றுமை அந்த வர்ணத்தை மூன்றாக கிழிக்க இன்றைக்கு சில சக்திகள் நினைக்கின்றன. மக்க ளின் ஒற்றுமையை நாட்டின் ஒற்றுமையை வலி யுறுத்த கூடியதாகவே உங்களுடைய பேச்சுக்கள் இருக்க வேண்டும்’’ என்றார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.