districts

img

விவசாயிகள் சங்க மேலூர் தாலுகா மாநாடு

மதுரை, மே 7- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மேலூர் தாலுகா மாநாடு தோழர் மு.அழகர்தாஸ் நினைவரங்கத்தில் மேலூரில் நடை பெற்றது. மாநாட்டிற்கு தாலுகாத் தலைவர் ஏ.ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். சங்கக் கொடியினை சங்கத்தின் துணைச் செயலாளர் கரு.கதிரேசன் ஏற்றினார். தாலு காக் குழு உறுப்பினர் ஏ.தனசேகரன் வர வேற்றார். தாலுகா துணைத் தலைவர் சி. அடைக்கன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டை துவக்கிவைத்து மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன் பேசினார். தாலுகாச் செயலாளர் வீ.அடக்கிவீரணன் வேலை யறிக்கை சமர்ப்பித்தார். கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழ னிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் நிறைவுரையாற்றினார்.  தாலுகா தலைவராக வி.அடக்கிவீர ணன், செயலாளராக ஏ.ராஜேஸ்வரன், பொருளாளராக பி.எஸ்.ராஜாமணி, துணைத் தலைவராக கரு.கதிரேசன், துணைச் செயலாளராக பாண்டி, ஆகியோர் உட்பட 9பேர் கொண்ட தாலுகாக் குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யபட்டனர். நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை தவிர்க்க, நெல் ஏற்றுக் கூலியை அரசே ஏற்று நடத் திட கோரியும், அலங்காநல்லூர் தேசிய கூட்டு றவு சர்க்கரை ஆலையை இந்த ஆண்டே துவக்கிட கோரியும், பெரியாறு அணை நீர்  மட்டத்தை நீர் மட்டத்தை 142அடியாக உயர்த்திட கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.