நாகர்கோவில், மே 19- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சியடைந்து விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளது. தோவாளை பூ சந்தையில் கடந்த வாரம் ரூ.3ஆயி ரத்திற்கு விற்னையான பிச்சி தற்போது ரூ.2700 சரிந்து ரூ.300-க்கு விற்பனையாகிறது இதுபோல், முல்லை ரூ.1000-இல் இருந்து ரூ.800 குறைந்து ரூ.200 ஆக விற்பனை யானது. வழக்கத்தை விட பூக்களின் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால், பூக்களின் தேவை குறைந்ததாலும், மழை காரணமாகவும் வியாபாரிகள் அதிகளவில் வராத தாலும் விற்பனையில் மந்தம் ஏற்பட்டு பூக்கள் விலை குறைந்தது. தோவாளை மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் வருமாறு: அரளிப்பூ ஒரு கிலோ ரூ.70, கனகாம்ப ரம் ரூ.300, மல்லிகை ரூ.225. வாடாமல்லி ரூ.60. கேந்தி ரூ.70, சம்பங்கி ரூ.30, ரோஜா (100 எண்ணம்) ரூ.15, பட்டன்ரோஸ் ரூ.80, துளசி ரூ.30. தாமரை (100 எண்ணம்) ரூ.200, பச்சை ரூ.8. கோழிப்பூ ரூ.40., சிவந்தி(மஞ்சள்) ரூ.60, கொழுந்து ரூ.70. மருக்கொழுந்து (கட்டு) ரூ.90, மஞ்சள் ரூஃ180, சிவந்தி (வெள்ளை), ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ. 300 என விற்பனையானது.