சிவகங்கை, டிச.21- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா எழு வன்கோட்டை அணைக்கட்டுப் பகுதியில் மணிமுத் தாற்றில் வெள்ளம் வந்தபோதும் கால்வாய் தூர்வா ரப்படாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வில்லை. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கும் நீர்வளத்துறைக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட துணைச் செய லாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு அளித்தனர். அந்த மனுவில் ,கடந்த ஒரு வார காலமாக மணி முத்தாற்றில் எழுவன்கோட்டை தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்கிறது. ஆனால் இந்த ஆண்டு தேவ கோட்டையில் ஒரு பகுதியும் கண்ணங்குடி முழுமை யும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் விவ சாயம் பொய்த்துப் போகும் அபாயம் உள்ளது. மணி முத்தாறு தண்ணீரை முறையாக தூர்வாரி கொண்டு செல்லாததால் கோட்டூர் திருமண வயல், ஆணை அடி வயல், திருப்பாக்கோட்டை, மானம்பு வயல் ,கீப்பிலி, மங்கலக்குடி வரை உள்ள கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாரப்படாததால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கண்மாய்க்கு கொண்டு செல்ல முடிய வில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் கால்வாயை தூர்வார வேண்டும். விவசாயத்திற்கு தேவையான தண் ணீரை கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.