மதுரை, ஜூலை 22- மதுரையில் இருந்து காசிக்கு தனியார் ரயில் இயக்கப்படுவதை கண்டித்தும் இரயில்வே துறையே அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் வெள்ளியன்று டிஆர்இயு ரயில்வே தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மதுரை கோட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை கிழக்கு நுழைவு வாயில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கோட்ட தலைவர் எம். சி. ஆன்ட்ரன் தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் எம். சிவக்குமார் முன்னிலை வகித்தார், துணைப் பொதுசெயலாளர் ஆர். சரவணன், கோட்ட இணைச் செய லாளர் ஆர். கண்ணன் , ஏஐஎல்ஆர் எஸ்ஏ சட்ட ஆலோசகர் ஆர். விஜய ராஜா, ஏஐஎஸ்எம்ஏ நிர்வாகி ஆர். திருமலை அய்யப்பன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி. செல்வா ஆகியோர் உரையாற்றி னர். டிஆர்இயு கோட்ட இணைச் செயலாளர் ஆர். சங்கரநாராயணன் நிறைவுரையாற்றினார். கோட்ட துணைத் தலைவர் எம். ஜெய ராஜசேகர் நன்றி கூறினார்.