districts

img

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தாதே!

தேனி, ஆக.25- பெட்ரோல், டீசல் மீதான கொடூர வரிவிதிப்பை குறைத்திடவும், மோட்டார் வாகன சட்டம், சாலை போக்குவரத்து மசோதாக்களை தமிழகத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலகுருநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொ துச்செயலாளர் ஏ.முருகவேல் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மதுரை மதுரை மாநகர் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்  சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு வெள்ளியன்று அனுப்பப்பட்டது. மாவட்டச் செயலா ளர் கனகவேல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். இராமநாதபுரம் இராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் டி.ராஜா, மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் வி.பாஸ்கரன் ஆகியோர் பேசினர். சிவகங்கை  காரைக்குடியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கருப்பு தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொதுச்செயலாளர் விஜய குமார், மாவட்டத் துணைத் தலைவர் சசிவர்ணம், உட்பட பலர் பங்கேற்ற னர்.