நாகர்கோவில், செப். 1- கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மனித உயிர்களை பாது காக்க உறவினர்களேகூட நெருங்க முடியாத நிலையில் அழைத்த போதெல்லாம் சளைக்காமல் ரத்த தானம் செய்ய வந்தவர்கள் இந்த இளைஞர்கள் என குமரி மாவட்ட டிஒய்எப்ஐ ரத்த தான கழகம் நடத்திய முகாமில் மருத்து அதிகாரி புகழாரம் சூட்டினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17 ஆவது மாநில மாநாடு செப்.11, 12, 13 தேதிகளில் கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. இதையொட்டி நாகர்கோ வில் வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டடத்தில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ரெதீஷ் தலைமை வகித்தார். முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.வி.பெல் ்லார்மின் துவக்கி வைத்தார்.
செயின்ட் ஜார்ஜ் கல்லூரி முதல்வர் எம்.எட்வின் ஞானதாஸ், கன்னியா குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மாவட்ட குருதி பரிமாற்று அலு வலர் டாக்டர் எஸ்.கரோலின் ஞான தாஸ், சங்கத்தின் செயலாளர் டி.எட்வின் பிறைட், வழக்க றிஞர்கள் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் உள்ளிட்டோர் பேசினர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் அதிக அளவில் ரத்த தானம் செய்த அமைப்பு இந்திய ஜனநாயக வாலி பர் சங்கமாகும். இதற்காக தொ டர்ச்சியாக மாவட்ட ஆட்சியரின் விருது இந்த அமைப்புக்கு கிடைத்து வருகிறது. சங்கத்தின் மாவட்டத் தலைவரும் வழக்க றிஞருமான வி.ரெதீஷ் 31 முறை ரத்த தானம் செய்துள்ளார். இணை செயலாளர் வி அனுமோன் விம லானந்தன் 35 ஆவது முறையாக இந்த முகாமில் ரத்த தானம் செய்தார். முதல் முறையாக பியூட்டிலின் ரெக்சி ரத்த தானம் செய்தார். முன்வந்த இளம் பெண்க ளில் வேறு சிலருக்கு ரத்தசோகை உள்ளிட்ட குறைபாடுகள் இருந்த தால் ரத்தம் பெற முடியாத நிலை ஏற்பட்டது. முகாமில் பிஎஸ்என்எல் ஊழயர் சங்க மாநில செயலாளர் ராஜு, வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் எம்.விஷ்ணு, பி.பிர வீன், வி.விபின், வி.அனுமோன், எக்ஸ்.ஷாஸன், எம்.ஆர்.பேட்ரிக் ஏங்கெல்ஸ், எம்.இலக்கியா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.