மதுரை, ஜூலை 18- தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்க லைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத் தினால் “மாதிரி பாடத்திட்டம்” என்ற பெயரில் அனைவர் மீதும் “பொது பாடத் திட்டம்” திணிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரி பொதுப் பாடத்திட்ட மானது, தேசிய அளவில் சிறப்பாக உள்ள தமிழ்நாட்டின் உயர் கல்வியை சீரழிக்கும் அபாயம் உள்ளது. மாநி லப் பல்கலைக்கழகங்களின் இறை யாண்மையும் உரிமையும் பறிக்கப் படும் நிலை, தன்னாட்சிக் கல்லூரி களின் பாட சுதந்திரம் அழியும் நிலை, தரம் குறைந்த பாடங்கள் என மொத் தத்தில் மிக மோசமாக உள்ளது என்று பேராசியர்கள் தெரிவிக்கின்றனர். திணிக்கப்படும் “பொதுப் பாடத் திட்டத்தை” திரும்பப்பெற வலி யுறுத்தி மூட்டா அமைப்பின் சார்பில் பேராசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கல்லூரிகளில் வாயில் முழக்கப் போராட்டம் நடத்தினர். மதுரையில் சௌராஷ்டிரா கல் லூரி, சரசுவதி நாராயணன் கல்லூரி, மதுரை கல்லூரி, தியாகராஜர் பொறி யியல் கல்லூரி, அருள் ஆனந்தர் கல்லூரி, ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, யாதவா கல்லூரி, வக்பு வாரிய கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வாயில் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மேலும் போடி ஏல விவசாயி கள் கல்லூரி, பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி, தேவ கோட்டை அப்சா கல்லூரி, விருது நகர் வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வாயில் முன்பும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மூட்டா பொறுப்பாளர்கள் விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டங் களில் 200 பெண் பேராசிரியர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட பேராசி ரியர்கள் கலந்துகொண்டனர்.