districts

img

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக உண்ணாவிரதம்

தேனி, ஆக.20- மருத்துவப்படிப்பு சேர்க்கைக் காக ஒன்றிய பாஜக அரசு திணித்  துள்ள நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆகஸ்ட் 20 அன்று திமுக  சார்பில் உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூர் ரவுண்டானா அருகே நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வடக்கு, தேனி தெற்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் செஞ்சூரி தலைமை வகித்தார்.தேனி வடக்கு  மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆஜிப்கான் முன்னிலை வகித் தார். தேனி தெற்கு மாவட்ட செய லாளர் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ,வடக்கு மாவட்ட செய லாளர் தங்க.தமிழ்ச் செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பி னர் மகாராஜன், முன்னாள் எம்பி. செல்வேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் மூக் கையா, ஜெயக்குமார், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் மனோ கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மணிக்கூண்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. உணவுத்துறை அமைச்  சர் அர.சக்கரபாணி, நாடாளு மன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் காந்திராஜன், சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம், காங்கிரஸ் கட்சி யின் மாநகரத்தலைவர் மணி கண்டன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சார்பாக மைதீன் பாவா உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், நீட் தேர்வை ரத்து  செய்யும் வரை அனைத்து இயக்கங்  களுடன் இணைந்து போராடு வோம் என்று தெரிவித்தார்.

இராமநாதபுரம் 

இராமநாதபுரம் அரன்மனை முன்பு உண்ணாவிரதப் போராட்  டம் நடைபெற்றது. பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். பொதுமக்களி டம் நீர் தேர்வு குறித்தும் அதன்  பாதிப்பு குறித்து பேசிட வேண்டும்  என்று அமைச்சர் கேட்டுக்கொண் டார்.  இந்தப் போராட்டத்தில் திமுக  மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா  முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.,  பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பி னர் முருகேசன்,மாணவரணி மாநி லத்தலைவர் ராஜீவ்காந்தி, இராம நாதபுரம் நகர்மன்ற தலைவர்  ஆர்.கே.கார்மேகம் மற்றும் ஏராள மானோர் கலந்துகொண்டனர்.