நாகர்கோவில், பிப்.17- இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலை யில் ஊன்றுகோல் துணையுடனும், இளை ஞர் படையுடனும் கொல்லங்கோடு நகராட்சி யின் 11 ஆவது வார்டு முழுவதும் 2 சுற்றுகள் வலம் வந்துவிட்டார் எம்.காம், எம்பிஏ பட்ட தாரியான முகமது பெரோஸ்கான் (34). அம்மா, அப்பா மற்றும் திருமணமான சகோதரனுடன் வசித்து வருகிறார் பெரோஸ் கான். வங்கி வேலை என்பதே வட்டித் தொழில் தான் எனக்கூறும் இவர் அதில் தனக்கு நாட்ட மில்லை என்கிறார். கொரோனா பெருந் தொற்றுக்கு முன்பு பெற்றோர் ஆசிரியர் கழ கத்தின் மூலம் ரூ.6000 மாதச்சம்பளத்துக்கு பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஆனால், இயலாதோருக்கும் பொதுமக்க ளுக்கும் சேவை செய்வதில் பேரார்வம் கொண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தி வருகிறார். பல்வேறு நலத்திட்டங் களும் மக்களுக்கு கிடைக்கச் செய்துள்ளார். இலவசமாக டியூசன் நடத்துகிறார். அருகில் உள்ள கேரளத்தில் உள்ளாட்சி அமைப்புகள் உண்மையான உள்ளுர் அரசு களாக அதிகாரம் பெற்று செயல்படுகின்றன. தமிழகத்திலும் அத்தகைய அதிகாரமும் நிதியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிறார். தன்னு டன் படித்தவர்கள், நண்பர்கள் என உயர் தொழில்நுட்ப வல்லுநர்களின் துணையுடன் முன்மாதிரியான சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தனது விருப்பம் எனவும் குறிப்பிட்டார். பொது நோக்கம் கொண்ட அவரது விருப்பம் நிறைவேற மக்க ளின் பேராதரவு கிடைத்து வருகிறது. வெற்றி நிச்சயம்.