districts

img

56 ஆயிரம் காலிப்பணியிடங்களை மின்வாரியத்தில் விரைந்து நிரப்பிடுக!

திண்டுக்கல், ஜூலை 23- மின்வாரியத்தில் காலி யாக உள்ள 56 ஆயிரம் பணி யிடங்களை விரைந்து நிரப்  பிட அரசு முன்வர வேண்டும் என்று மின் ஊழியர் மத்திய அமைப்பின் பேரவை வலி யுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 24 ஆவது திட்ட பேரவை திண்டுக்கல் லில் பஞ்சரத்தினம் நினை வரங்கில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. பேர வைக்கு மாவட்டத்தலைவர் ஆர்.திருமலைச்சாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தின் திண்டுக்கல் தாலுகா செயலாளர் க.ஜெய சீலன் கொடியேற்றினார். திட்டத் துணைத்தலைவர் ஆர்.கோவிந்தராஜன் அஞ்  சலி தீர்மானத்தை வாசித் தார். திட்டத்தலைவர் ஜி. சின்னப்பன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன் துவக்க வுரையாற்றினார். திட்டச் செயலாளர் ம.உமாபதி, பொருளாளர் க.சங்கர் ஆகி யோர் அறிக்கைகளை சமர்ப்  பித்தனர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணே சன், மின் ஊழியர் மத்திய  அமைப்பின் மண்டலச்செய லாளர் எஸ்.உமாநாத், ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் சார்பாக எஸ்.நல்லகண்ணு, அரசு போக்குவரத்துக்கழக கோட்டத்தலைவர் ஐ.ஜே.குமார், கோட்டச்செயலாளர் என்.ராமநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்  கத்தின் மாநில பொதுச்செய லாளர் டி.பழனிவேல் நிறை வுரையாற்றினார். திட்ட துணைச்செயலாளர் எஸ்.மாரிமுத்து நன்றி கூறினார்.  மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். கௌரவத் தலைவராக உமாபதி, தலைவராக எஸ். மாரிமுத்து, துணைத்தலை வராக கே.ஜெயசீலன், செய லாளராக ஆர்.திருமலைச் சாமி, பொருளாளர் சங்கர்  ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  மின்வாரியத்தில் நிலவும்  56 ஆயிரம் காலிப்பணியிடங் களை விரைந்து நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஊதிய  உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். வட சென்னை அனல்மின் நிலை யம் அலகு 3-ஐ தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை  கைவிட வேண்டும். தனியா ருக்கு மின்வாரியத்தை தாரை வார்க்கும் அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.            (ந.நி.)