districts

img

ஸ்ரீராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாயடக கூடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இ.பெரியசாமி  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  ரூ.6.80 லட்சம்,  ரூ. 9.30லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு குழந்தைகள் மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் ப.வேலுச்சாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், செயல் அலுவலர் விஜயா,பேரூராட்சித் தலைவர் சகிலாராஜா, துணைத்தலைவர் முருகேசன், ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திருப்பதி, நாகலெட்சுமிரமேஷ், காளீஸ்வரி மலைச்சாமி, பிரம்மசாமி, வார்டு உறுப்பினர்கள் பால்பாண்டி, ஆனந்தன், பா.பிரியா, சாந்தி, மகுடீஸ்வரன், மாலதி, பாலமுருகன், பிரியங்கா, தங்கேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;