districts

img

விளை பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கேட்டு ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூலை 3- தென்னை, மா, இலவு, காபி, ஏலம் பயிர்களுக்குக் கட்டுப்படியான விலை வழங்கி, அரசு கொள்முதல் செய்ய வேண்டும். குத்தகை  விவசாயிகளைப் பாதுகாக்க  வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்  கம் சார்பில் போடியில் ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது. போடி கட்டபொம்மன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் கோரிக்கைகளை வலியு றுத்திப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன், விதொச மாவட்டச் செயலாளர் எல். ஆர்.சங்கரசுப்பு, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், ஆர்.தங்கபாண்டி, வி.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

;