districts

img

ராகுல் பதவி பறிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து  இராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் கே.நவாஸ்கனி எம்.பி., தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் அ.வருசைமுகம்மது வரவேற்றார். திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கண்டன உரையாற்றினார். முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கரு.மாணிக்கம், சி.பி.எம் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், ஆர்.குருவேல்,எம்.ராஜ்குமார்,இ.கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் என் வெங்கடேஷ் தாலுகா செயலாளர் செல்வராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளர் என்.எஸ்.பெருமாள், மதிமுக மாவட்ட செயலாளர் எம்.பேட்ரிக், ஆதிதமிழர் பேரவை மாவட்ட நிர்வாகி புவனேஷ், மற்றும் பெரியார் பேரவை நிர்வாகி நாகேஷ்வரன்,நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம்,துணைத்தலைவர் பிரவீன்தங்கம் உட்பட பலர் பேசினர்.