districts

மதுரை முக்கிய செய்திகள்

கடலில் மூழ்கி பலியான சிறுமிகள்  குடும்பத்தாருக்கு சிபிஎம் ஆறுதல் தலா ரூ.10 லட்சம் வழங்க வலியுறுத்தல்

சிவகங்கை, ஜூலை 12- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளான ஆரோக்கிய ஷெரின், ரியானா, சஹானா ஆகியோர் வேளாங்கண்ணி யில் உள்ள கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அந்த சிறுமி களின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றியச் செயலாளர்  ஆண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார், ராஜகம்  பீரம் கிளை செயலாளர் காசிராஜன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, ஆறுதல்  கூறினர்.  உயிரிழந்த ஒவ்வொரு சிறுமியின் குடும்பத்தின ருக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று  கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்ட  ஆட்சித் தலைவரை கேட்டுக் கொண்டுள்ளார்.

தேனி: இடைத்தேர்தல் முடிவுகள்

தேனி, ஜுலை 12- தேனி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்  ளாட்சிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண் ணிக்கை செவ்வாயன்று நடைபெற்றது. இதில் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அன்னபிரகாஷ் 4ஆயிரத்து 155வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல் டி.வாடிப்பட்டி ஊராட்சியின் 3-வது வார்டு  உறுப்பினராக சி.ரவியும் , சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு  உறுப்பினராக ம.லட்சுமிதேவியும் வெற்றி பெற்றனர்.

மாதர் சங்க ஒன்றிய மாநாடு

சின்னாளபட்டி, ஜூலை 12- திண்டுக்கல் மாவட்டம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய மாநாடு கன்னிவாடியில் செவ்வாயன்று நடைபெற்றது.  சங்கத்தின் தலைவர் பத்மா தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எம்.பழநியம்மாள் துவக்கி வைத்துப் பேசினார். தலைவராக பத்மா, செய லாளராக  எஸ்.கவிதா, பொருளாளராக சூர்யா ஆகியோர்   தேர்வு செய்யப்பட்டனர்.  மாவட்டச் செயலாளர் ஜி.ராணி நிறைவுரையாற்றி னார். பேரூராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலை களை செப்பனிட வேண்டும். அரசு நகரப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

இராஜபாளையம், ஜூலை 12- இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்விக் குழும ஆசிரியர்களுக்கான திறன்மிக்க பேச்சாற்றல் கலை பயிற்சி முகாம் இராஜபாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் விருதுநகர் ரோட்டரி சங்கம்  சார்பில் நடைபெற்றது. வைமா.திருப்பதி செல்வன் தலைமை  வகித்தார். இராதா அறிமுக உரையாற்றினார். பயிற்சியா ளர் ரெங்கசாமி பயிற்சியளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கேசா டி மிர் பள்ளியின் முதல்வர் அருணா தேவி,  துணை முதல்வர் பானுப்பிரியா தலைமையில் செய்தி ருந்தனர்.

நூல் வெளியீட்டு விழா 

இராமநாதபுரம், ஜூலை 12- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் இராமநாதபுரம் கிளைச்செயலாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளரான பேரா. வா. ஸ்டாலின் எழு திய “கொளவி கொட்டியது” நூல் வெளியீட்டு விழா  மாதர் சங்க மாவட்ட செயலாளர் இ.கண்ணகி தலைமை யில் நடைபெற்றது. கிளை பொருளாளர் ஆ. கோவிந்த  ரவி வரவேற்றார். பொறியாளர். குருதிவேல் மாறன் புத்த கத்தை வெளியிட, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் பி.சேகர் பெற்றுக் கொண்டார். கவிஞர். நா. கலையர சன், முனைவர் சி.பாலமுருகன் ஆகியோர் புத்தகம் குறித்துப் பேசினர். மாவட்டச் செயலாளர் மருத்துவர் ஆ. வான் தமிழ் இளம்பரிதி, மாவட்ட தலைவர் த. முத்து லட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் முகவை. அழகுடை யான் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். நூல் ஆசிரியர்  பேரா. வா.ஸ்டாலின் ஏற்புரை வழங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சங்கவி நன்றி கூறினார்.

கருங்குளத்தில் பழுதடைந்த  மின்கம்பங்களை மாற்றக் கோரிக்கை

சிவகங்கை, ஜூலை 12- சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா  ஆ.கருங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கிராம பொதுமக்கள்  காளையார் கோயில் துணை மின்வாரிய அலுவலகத் திற்கு சென்று உதவி மின் செயற் பொறியாளாரிடமும் உதவி செயற்பொறியாளரிடமும் மனு கொடுத்தனர். காலாவதியாகிப்போன பழுதடைந்த மின் கம்பங் களை மாற்றியமைக்க வேண்டும். கிராமம் முழுவதும் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்  டும். அதிக மின் அழுத்த திறன் கொண்ட மின்மாற்றி களை அமைக்க வேண்டும். தொடர் மின்தடை ஏற்பட்டு  பொதுமக்கள் அவதிக்குள்ளாவதை தவிர்க்கும் பொருட்டு மின்தடையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனர். 

மராமத்து செய்யாத கண்மாய் மடை  சூரக்குடியில் பொய்த்துப்போன விவசாயம்

காரைக்குடி, ஜூலை 12- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.சூரக்குடி ஆண்டிவயல் கண்மாய் மடையை பழுதுநீக்கம் செய்யாத தால் கடந்த ஏழு வருடங்களாக விவசாயம் பொய்த்துப் போய் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதுதொடர்  பாக ஆறுதடவைக்குமேல் மனு கொடுத்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்குடி தாலுகா செயலாளர், பொறியா ளர் அழகர்சாமி, மாவட்ட ஆட்சியர்க்கு புகார் செய்திருக்கி றார். இக்கண்மாய் மடையை சரி செய்யாததால் கடந்த ஏழு வருடங்களாக விவசாயம் பொய்த்துப் போனதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகமே பொறுப்பாகும்.இந்த ஆண்டாவது கண்மாய் மடையை பழுதுநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

திருவில்லிபுத்தூரில்  74 பவுன் நகைகள் மோசடி

திருவில்லிபுத்தூர், ஜூலை 12 திருவில்லிபுத்தூர் பெருமாள் பட்டியில் வசிப்பவர் பழனி குமார் (வயது 32) இவர் இப்பகுதியில் சைக்கிள் கடை வைத்துள்ளார். மேலும் இவர்  ஜோதிடம் திருஷ்டி பரிகார பூஜைகள் செய்து வந்துள்ளதாக கூறப்படு கிறது இந்த நிலையில் பழனி குமாரிடம் திருவில்லிபுத்தூர் பத்ர காளியம்மன் நகர் மாரியப்பன் காம்பவுண்டில் வசிக்கும் பாலமுருகன் என்பவரது மனைவி தங்க மாயாள் (வயது 42) என்பவர் நகர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ள தனது கணவருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி பழனி குமாரை அணுகியுள்ளார் . அதன்பின் பழனி குமாரும் அவரது மனைவி ரம்யாவும் உங்கள் வீட்டில் தங்க நகைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தால் கணவனின் நோய் குணமாகும் என்று கூறியுள்ளனர். அதனை நம்பிய தங்க மாயாள் தங்க நகைகளை பழனி குமாரிடம் கொடுத்துள்ளார் ஆனால் பழனி குமார் பூஜை செய்துவிட்டு தங்க  நகைகளை திருப்பி தரவில்லை.  இதே போல் பழனி குமார் ,ரம்யா தம்பதி யர் பலபேரிடம் நகை மோசடி செய்துள்ளனர் .மொத்த நகைகளின் மதிப்பு 74 பவுன் ஆகும் என்று கூறப்படுகிறது.  நகைகளை இழந்த அனைவரும் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி  பழனி குமார், அவரது மனைவி ரம்யாவை யும் கைது  செய்து, நகைகளை மீட்டனர்.

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநாடு 

சிவகங்கை, ஜூலை 12-  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் காரைக்குடி வட்டார மாநாடு காரைக்குடியில் நடைபெற்றது.  இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். தலைவராக மாதவன், செயலாள ராக வீரராகவன், பொருளாளராக ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொறுப்பா ளர் அழகேசன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். காரைக்குடி பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து சாலைகளை செப்பனிட வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் சங்க அருப்புக்கோட்டை ஒன்றிய மாநாடு

அருப்புக்கோட்டை, ஜூலை 12- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அருப்புக் கோட்டை ஒன்றிய 23 வது மாநாடு நடைபெற்றது. பாலையம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் ஜெயராம் தலைமை தாங்கி னார். அஞ்சலித் தீர்மானத்தை பூமிராஜ் வாசித்தார். மாநாட்டை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட  தலைவர் எஸ்.பூங்கோதை துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பெருளாளர் எஸ்.மனோஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்  றிய செயலாளர் எம். கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவுசெய்து மாவட்ட செயலாளர் வி.முரு கன் பேசினார்.  புதிய நிர்வாகிகள் தேர்வு : ஒன்றியத் தலைவராக ஜெயராமு, செயலாளராக எம்.காமாட்சி நாதன், பெருளா ளராக பி.பூமிராஜ் ஆகியோர் உட்பட 10 பேர் கொண்ட  ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.

விவசாயிகள் சங்க  போடி தாலுகா மாநாடு 

தேனி, ஜூலை 12- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போடி தாலுகா மாநாடு போடியில் தாலுகா தலைவர் இ.மூக்கையா தலை மையில் நடைபெற்றது. சங்க கோடியை மாயத்தேவர் ஏற்றி வைத்தார் மாவட்ட செயலாளர் டி.கண்ணன் துவக்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் எஸ்.கே.பாண்டி யன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், சிஐடியு தாலுகா செயலாளர் பி.சந்திர சேகர் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரையாற்றினார். தாலுகா தலைவராக இ.மூக்கையா, செயலாளராக எஸ்.கே.பாண்டியன், பொருளாளராக சுரேஷ், துணைத்  தலைவர்களாக பரமசிவம், செல்லப்பாண்டி, துணைச் செயலாளர்களாக அதிகாரி, செல்வராஜ் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வாக்குறுதிப்படி சூலப்புரம் குது வலில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். வடக்கு மலை, அகமலை விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும், உலகுருட்டி -அகமலை, அத்தி யூத்து பகுதிகளில் சாலை அமைக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மின் கம்பத்தில் கார் மோதி பெண் பலி

காரியாபட்டி, ஜூலை 12- காரியாபட்டி அருகே மின் கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள  அழகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவ ரது மனைவி நீமுத்து(50).இவர் தனது உறவினர்களுடன் கோயம்புத்தூருக்கு காரில் சென்றுள்ளார். பின்பு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அழகிய நல்லூர் கரிச கண்மாய் அருகே வந்த போது, எதிர்பாரத விதமாக, நிலை தடுமாறிய கார், சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற அனைவரும் காயமடைந்தனர்.  இதையடுத்து, விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் நீமுத்து உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் மருதுபாண்டியன் கொடுத்த புகா ரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப் பதிவு  செய்து கார் ஓட்டுநர் குமரேசனிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

ஆட்டோ மீது மான் விழுந்து விபத்து: மூதாட்டி பலி

விருதுநகர், ஜூலை 12- விருதுநகர் அருகே சாலையில் சென்ற ஆட்டோ மீது  மான் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி ஒருவர் உயி ரிழந்தார். அருப்புக்கோட்டை, பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்த  மணிகண்டன். இவரது மனைவி வேல்த்தாய்(65). இவர்  களது உறவினர்களான கருத்தப்பாண்டி, முருகசதர்சனா, ஜோதி, திவ்யா ஆகியோருடன் ஆட்டோவில் சந்தையூ ருக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை முனிய சாமி என்பவர் ஓட்டியுள்ளார்.  இந்நிலையில், மணியம்பட்டி சுடுகாடு அருகே ஆட்டோ சென்றபோது, திடீரென ஒரு மான் ஆட்டோ வின் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ,  பள்ளத்தில் விழுந்தது. இதில் அனைவரும் காயம டைந்தனர். பின்பு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, வேல்த்தாயை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.  இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனுக்கு பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

விருதுநகர், ஜூலை 12- சிவகாசியைச் சேர்ந்த 5 வயது சிறுவனை பாலியல்  வன்புணர்வு செய்தவருக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை  தண்டனை வழங்கி உத்தரவிட்டது. சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்தர் மாரிச்செல்வம். இவர் கடந்த 2017 ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது  சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இது குறித்த வழக்கானது திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசா ரித்த நீதிபதி பூரணஜெயஆனந்த் ,குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5ஆயிரம் அபதார மும் விதித்து உத்தரவிட்டார்.

இளைஞரை அடித்துக்கொன்று  அணையில் உடல் வீச்சு: ஒருவர் கைது

சின்னாளபட்டி, ஜூலை 12- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூ ராட்சிக்குட்பட்ட சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர்  பழனிச்சாமி மகன் அழகுவிஜய் (24) கட்டிடத் தொழிலாளி.  அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் அஜித்(26)  கூலி வேலை செய்து வருகிறார். அஜீத்தின் தங்கை துர்கா  (17) கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். அழகு விஜயும், துர்காவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் துர்கா வீட்டாருக்கு தெரிய வரவும்  இருவரையும் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அவ்வப் போது தகராறும், கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் திங்கள்கிழமையன்று இரவு அழகு விஜய்யும், துர்காவும் சேடபட்டியில் தனிமையில் சந்தித்து பேசியதாக தெரிகிறது. இது தெரிந்து வந்த துர்காவின்  அண்ணன் அஜித்குமார் தங்கையை கண்டித்ததுடன் அவர் கண் முன்பே அழகுவிஜய்யை கடுமையாக தாக்கியதில் இறந்ததாக கூறப்படுகிறது. அழகுவிஜய்யின் உடலை சேடபட்டி அருகில் உள்ள தோட்டத்தில் மறைத்து வைத்து விட்டு, தனது தந்தையான தமிழ்செல்வனுக்கு தகவல்  தெரிவித்துவிட்டு இருவரும் ஒரு சாக்கு பையில் அழகு விஜய்யின் உடலை கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து  ஆத்தூர் காமராஜர் அணையின் கரை ஓரத்தில் புத ருக்குள் தூக்கி வீசிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.  காலையில் அஜித்குமார் வீட்டின் அருகில் இரத்தம்  இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் போலீசா ருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து செம்பட்டி போலீசார்  தீவிர விசாரணை செய்தனர். அதில் தமிழ்செல்வன் கொடுத்த  தகவலின் அடிப்படையில் ஆத்தூர் காமராஜர் அணை பகு தியில் சாக்கு மூட்டைக்குள் இருந்த அழகுவிஜய்யின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் விசாரணை நடத்தி துர்காவின் தந்தை தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை  முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்கிறது

தேனி, ஜூலை 12- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்  துள்ளது. இதனால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்க ளில் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில்  பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரி யாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. திங்களன்று 2122 கன அடியாக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை காலை 3266 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 129.05 அடி யாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகு திக்கு 1655 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு  4493 மி.கன அடியாக உள்ளது. இதே போல் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து  உயர்ந்து வருகிறது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் செவ்வாயன்று காலை நிலவரப்படி 55.61 அடி யாக உள்ளது. நீர்வரத்து 1555 கன அடி. திறப்பு 969 கன  அடி. இருப்பு 2818 மி.கன அடி. நீர் பிடிப்பில் தொடர்ந்து  மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் விரைவில்  60 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சளாறு  அணையின் நீர்மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 7527 அடியாகவும் உள்ளது.  மழையளவு: பெரியாறு 44, தேக்கடி 13, கூடலூர் 2.3, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.