அவிநாசி, மார்ச் 8- திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையத்தில் தனி யார் பேருந்தின் அலட்சியத்தால் பலியான பெண் குடும்பத் திற்கு நீதி கேட்டு ஆட்டையாம்பாளையம் பகுதியில் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய குழு சார்பாக ஆட்டையாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே புதனன்று மறியல் போராட்டம் அறிவிக்கப்பட் டிருந்தது. எனினும் இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கப் பட்ட விபரத்தை தெரிவித்ததுடன், உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று காவல் துறையினர் உறுதியளித்த நிலையில், மறி யல் போராட்டம் மாற்றப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ. சண்முகம் தலைமை ஏற்றார். அவிநாசி, தெக்கலூர் பகுதிக ளில் பேருந்துகள் வந்து செல்ல வேண்டும், பலியான பெண் குடும்பத்திற்கு விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து நிர்வாகத்திடம் இழப்பீடுத் தொகை பெற்றுத் தர வேண்டும், ஆட்டையம்பாளையம் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் நந்தகோபால், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம் மேளனம் மாநில தலைவர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, பாலசுப்பிரமணியம், மோகன சுந்தரம், ராஜன், திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பி னர் தேவராஜன், உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிச்சாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் செல்வி, ஒன்றிய தலைவர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண் டனர்.