தேனி, ஏப்.11- தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியுள்ள சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என தேனி மாவட்டத் தில் நகராட்சி, பேரூராட்சி அலு வலகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக் கப்பட்டது. தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் தாலுகா செய லாளர் இ.தர்மர் தலைமையில் எம்.முத்துக்குமார், கே.குபேந்தி ரன் ஆகியோர் மனு அளித்தனர். பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி ஆகிய பேரூராட்சியில் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் சி. முனீஸ்வரன், ஆர்.பொன்னுத் துரை, வி.ராஜேந்திரன் உள் ளிட்டோர் மனு அளித்தனர். வீரபாண்டி பேரூராட்சியில் தாலுகா குழு உறுப்பினர் ஏ.சி.காமுத்துரை, பி.செல்வராஜ் ஆகி யோர் மனு அளித்தனர். மார்க் கையன்கோட்டை, குச்சனூர் ஆகிய பேரூராட்சிகளில் சின்ன மனூர் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம், நடராஜன், சக்திவேல் உள்ளிட்டோர் மனு அளித்தனர். கே.கே.பட்டி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி வார்டு உறுப்பி னர் எஸ்.பன்னீர்வேல், ஏரியா குழு உறுப்பினர்கள் எச்ஸ்ரீராமன், கே.முருகன், கிளை செயலாளர் கே.நாகராஜ் உள்ளிட்டோர் பேரூ ராட்சி தலைவரிடம் மனு அளித்தனர். போடி போடி நகராட்சி ஆணையரி டம், மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் எஸ்.கே.பாண்டியன், எஸ்.செல்வம், செல்வராஜ், சந்தி ரசேகர், செல்லத்துரை, மூக்கையா உள்ளிட்டோர் மனு அளித்தனர். பெரியகுளம் பெரியகுளம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் மதன்குமார் பேசும் போது, சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் வலி யுறுத்தி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமாரிடம் மனு அளித்தார். பண்ணைபுரம் பேரூராட்சி யில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.சுருளிவேல் சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும் என மனு அளித்தார்.