எய்மஸ் மருத்துவமனை... நைபர் மருந்து நிறுவனம்...
சர்வதேச விமான நிலையம் என்னவானது?
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். நைபர் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை தொடங்க வேண்டும். 100 நாள் வேலை யை பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும். திருமங்கலம் கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி யை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 400 கி.மீ. நடைபயணம் மேற்கொள்கிறது. இந்தப் பயணத்தில் 200 பேர் பல குழுக்களாக பங்கேற்றனர். செங்கொடி பறக்கும் ஒவ் வொரு கிராமத்திலும் உள்ள கட்சி உறுப்பினர்கள், தொழி லாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்று மதுரை மாவட்டத்தின் கோரிக்கைகளை ஒன் றிய அரசின் செவிகளுக்கு எட்டச் செய்யும் பொறுப்பை நிறைவேற்றவுள்ளனர்.
டிச. 23-ஆம் தேதி தொடங்கும் நடைபயணம் டிச. 26-ஆம் தேதி நிறைவுபெறுகிறது. கள்ளிக்குடி, கொட்டாம் பட்டி, குருவித்துறை, எழுமலை ஆகிய இடங்களிலி ருந்து புறப்படும் நான்கு குழுக்கள் 400 கி.மீ. பயணம் மேற்கொண்டு கிராமங்கள் தோறும் மக்களைச் சந்திக் கின்றன. இந்த நடைபயணத்தில் கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.இராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் பங்கேற்கின்றனர். டிச. 27-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப் பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் கலந்துகொள்கிறார்.
மதுரை எய்ம்ஸ் திட்டமிட்டுப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு
* தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது - 28.2.2015. * மதுரை தோப்பூரில் இடம் தேர்வு - 18.06.2018. * ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது- 17.12.2018. * மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டது தேதி - 27.01.2019. * சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங் கப்பட்டது - 25.11.2019. * மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு இடம் ஒப்படைக்கப்பட்டது - 3.11.2020. * நிர்வாக இயக்குநர் அறிவிப்பு - 22.2.2021. * ஜப்பான் கடன் ஒப்பந்தம் கையெழுத்து - 26.03.2021. * மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. 16.7.2021. 27.1.2019 அன்று தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியால் மதுரை மக்கள் மட்டுமல்ல, தென் தமிழக மக்கள் அனைவரும் தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறப்போவதாக மகிழ்ந்தார்கள். ஆனால், நான்காண்டுகள் ஆகியும் அடிக்கல் நாட்டிய இடத்தில் கட்டுமான வேலைகள் தொடங்கப்படவில்லை. ரூ.1,978 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2026-ல் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் தாமதத்தால் இதன் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடியை தாண்டி நிற்கிறது. இதற்கிடையில் மதுரைக்கு வந்திருந்த பாஜக தலை வர் ஜெ.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக அபாண்டமாக பொய் கூறி னார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலையை வெளிச் சம் போட்டுக்காட்டினர். இதற்குப் பின்னரும் தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. வேலை எப்போது தொடங்கும் என்பதுதான் தெரியவில்லை. வேலை முடிவடையும் நாளைக் கூறு கிறார்கள். வேலை தொடங்கும் நாளை அறிவிக்க மறுக்கி றார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17-வது கூட்டத்தொடரிலும் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கும் கூட, பணி முடிவடையும் நாளைத்தான் கூறியுள்ளது ஒன்றிய அரசு.
நைபர் கல்வி நிறுவனம்
நைபர் கல்வி நிறுவனம் மருந்தியல் அறிவியல் துறையில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கும். மேலும், மருந்துக் கட்டுப்பாடு, கண்காணிப்பு, மருந்துகளின் பயன்பாடு, அதை தவறாகப் பயன் படுத்துவதைத் தவிர்ப்பது மற்றும் சமூகவியல் தாக் கங்கள் என பலதரப்பட்ட அம்சங்களில் படிப்புகளை வழங்கும். இத்துடன், மருத்துவ வேதியியல், இயற்கை மருந்துகள், பாரம்பரிய மருத்துவம், மருந்தியல் கூறாய்வு, நச்சு இயல், உயிரி தொழில் நுட்பவியல், மருத்துவ ஆராய்ச்சி, மருந்து தொழில் நுட்பம், மருந்து மேலாண்மை உள்ளிட்ட 15 விதமான படிப்புகளையும், நைபர் வழங்குகிறது. மதுரையை மருத்துவ முனையமாக மாற்றும் ‘நைபர்’ எனப்படும் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறு வன திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை யை ஒன்றிய மோடி அரசு கண்டு கொள்ளவில்லை. நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க 2011-12-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.இக்கல்வி நிறுவனம் அமைப்ப தற்கென தேர்வான மையங்களில் மதுரையும் ஒன்று. 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த எட்டாவது நிதிக்குழுக் கூட்டத்தில் விவாதித்து இறுதி செய்யப் பட்டது. உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து அகமதாபாத், கவுகாத்தி, ஹைதராபாத், ஹாஜிபூர், கொல்கத்தா, மொகாலி, லக்னோ ஆகிய இடங்களில் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மதுரையில் ‘நைபர்’ அமைப்ப தற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மதுரையில் நைபர் கல்வி நிறுவனம் அமைக்க ரூ.1,100 கோடி முன்மொழிவு தயாரித்து, இதற்கான நிலம் மதுரை மாவட்டம், திருமோகூர் அருகே 116 ஏக்கர் ஒதுக்கப் பட்டு நிலமும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் பணிகள் தொடங்கவில்லை நைபர் நிறுவனத்திற்கான சொந்த வளாகம் உருவாகும் வரை, மதுரை காமராசர் பல்க லைக்கழகத்திலேயே குறைந்தது மூன்று ஆண்டுகள் இயங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளது. இவ்வளவிற்குப் பிறகும் நைபர் மருத்துவமனையை மதுரையில் அமைப்பதில் மோடி அரசு அலட்சியமாக உள்ளது.
சர்வதேச விமான நிலையம்
சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த நான்காவது பெரிய விமான நிலையம் மதுரை ஆகும். இந்த விமான நிலையம் 1957- ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேற்கண்ட சர்வதேச விமான நிலை யங்களுக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மதுரை விமான நிலையத்திற்கு மட்டும் சர்வதேச அந்தஸ்து வழங்கவில்லை.
உத்தரப்பிரதேசத்திற்கு ஒரு நீதி... மதுரைக்கு ஒரு நீதியா?
உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த பன்னாட்டுப்பயணிகளின் எண்ணிக்கையை விட ஏறக்குறைய மூன்றுமடங்கு அதிகம் மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணித்த பன்னாட்டு பயணி களின் எண்ணிக்கை. நாடு முழுவதுமுள்ள 21 சர்வதேச (ஏ) விமான நிலையங்களில், 11 விமானநிலையங்களிலி ருந்து பயணம் செய்த பன்னாட்டு பயணிகளின் எண் ணிக்கையை விட மதுரை விமானநிலையத்திலிருந்து பயணம் செய்த பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகம். விமானத்துறை அறிவித்துள்ள பத்து சுங்கத் துறை விமான நிலையங்களில் பன்னாட்டுப் பயணிகள் அதிகம் பயணிக்கும் விமானநிலையமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது மதுரை விமான நிலையமே. பிரதமர் மோடி தலைமையிலன அரசு வளர்ச்சி சார்ந்த குறியீடுகள் பலவற்றில் முதன்மையாக இருக்கும், ஜிஎஸ்டி பங்களிப்பில் இரண்டாவதாக இருக்கும் தமி ழகத்துக்கு நியாயம் வழங்க மறுக்கிறது. தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் துபாய், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு நாடு கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைவாய்ப்பு, வியாபார ரீதியாக சென்று வருகின்றனர். அவர்கள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்த முடியாமல் சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் விமான நிலையங்களுக்கு செல்கின்றனர். அதுபோல் பழங்கள், மல்லிகை உள்ளிட்ட நறுமணப்பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள்கூட மற்ற விமான நிலையங்களுக்கு அனுப்பி அங்கிருந்து வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால் தான் மதுரை விமான நிலையத்தை சர்வ தேச விமானநிலையமாக அறிவியுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
100 நாள் வேலை
100 நாள் வேலையைமோடி அரசு மாற்றாந் தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது. வசதி படைத்த மாநிலங்கள், நலிந்த மாநிலங்கள் எனக் கூறுபோட்டு திட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருகிறது. 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும். சட்டக் கூலி வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற் கான நிதியை வேறு பணிகளுக்கு மடை மாற்றம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யமும் திருமங்கலம் தாலுகா கப்பலூரில் உள்ள சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். இந்த சுங்கச்சாவடி விதி களுக்கு புறம்பாக அமைந்துள்ளது. இதனால் திருமங்க லம், தே.கல்லுப்பட்டி பகுதி மக்கள் மட்டுமல்ல; விருது நகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், தென்காசி மாவட்டத்தின் சில பகுதி மக்களும் கடுமை யாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.