சென்னை, ஏப். 4 - விதிமீறல், ஊழல், சாதிய புகார்க ளுக்கு உள்ளாகியுள்ள அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மது பிரசாத்தை பணி இடைநீக்கம் செய்து விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர் மது பிரசாத் 2016 - 2019 மார்ச் வரை பொறுப்பு நிலைய மருத்துவராக செயல்பட்டார். 2019 மார்ச் முதல் பொறுப்பு கண்காணிப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு விதிமுறைகள் மற்றும் வழி காட்டு நெறிமுறைகளை மீறி இப்பொறுப்புக்கு வந்துள்ளதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் மருத்துவர் மதுபிரசாத் ஈடுபட்டுள்ள தாக தெரிகிறது. மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோரிடம் மதுபிரசாத் ஆதிக்க சாதி மனநிலையில் பேசியும், செயல்பட்டும் வருகிறார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கும், பட்டியலினத்தவர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளிடம் புகார் அளித்துள்ளனர். கொரோனா காலத்தில் மருத்துவ பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்றிய அரசின் இஎஸ்ஐ குடியிருப்பை மதுபிரசாத், தனது சுயதேவைக்காக பல மாதங்கள் பயன்படுத்தியுள்ளார். இதற்கு அபராதமாக 81 லட்சம் ரூபாய் செலுத்த ஒன்றிய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி மருத்துவக் கண்காணிப்பாளர் பணிக்கு கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடைபெற்றுள்ளது. மருத்துவக் கண்காணிப்பாளர் பணியை கலந்தாய்வு மூலம் தேர்வு செய்த மருத்துவரிடம், ஏற்கனவே மருத்துவர் ஒருவர் மருத்துவ கண்காணிப்பாளர் பொறுப்பை தேர்வு செய்து விட்டார் என்ற காரணத்தை சொல்லியுள்ளனர். இதன்பின்னர், டிச.8 ஆம் தேதி மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடத்தை தவிர்த்து பிற பணி யிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. கலந்தாய்வு மூலம் மருத்துவ கண்காணிப்பாளர் பணி யிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட மருத்துவர் கலைச்செல்வி இதுவரை அந்தப் பணியில் ஈடுபட விடாமல், மது பிரசாத் பொறுப்பு மருத்துவ கண்காணிப்பாளராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்திடம் மதுபிரசாத் குறித்து பல்வேறு தரப்பினர் புகார்கள் அளித்துள்ளனர். இதன் காரணமாக மதுபிரசாத் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று 2022 ஆண்டு பிப்.24 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மார்ச் 28 ஆம் தேதி மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “மருத்துவர் மதுபிரசாத் மீதுள்ள விசாரணைக்கு புகார் தெரிவிக்க விருப்பமுள்ளவர்கள் கையொப்பம் இடலாம், விருப்பம் இல்லாதவர்களும் புகார் இல்லையென கையொப்பமிட வேண்டும், விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என தெரி வித்துள்ளார். உயர் அலுவலராக மதுபிரசாத், பணியில் இருக்கும்போது அவரின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் எப்படி வெளிப்படையாக புகார்களை எடுத்துரைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்கும் உரிமையை தடுக்கக்கூடியதாகும். இந்த விசாரணைக்குழு அமைச்சர் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா என தெரியவில்லை. எனவே, ஐந்தாண்டுகளாக மதுபிரசாத் மீது அரசுக்கு வந்துள்ள அனைத்துப் புகார்களையும் உரிய முறையில் விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். குழுவின் உரிய விசாரணை செய்து, சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். விசாரணைகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெற மதுபிரசாத்தை பொறுப்பு கண்காணிப்பாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.