districts

img

பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் மீன்கள் சிலையை நிறுவ நீதிமன்ற ஆய்வுக்குழு முடிவு

மதுரை, ஜூலை. 21-   மதுரை ரயில் நிலையம் முன் 1999 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் 3 டன் எடை கொண்ட மீன்கள் சின்ன சிலை வைக்கப்பட்டு இருந் தது, 2019 ஆம் ஆண்டு ரயில் நிலைய கட்டு மான பணிகளுக்காக மீன்கள் சிலை அகற் றப்பட்டது, அகற்றப்பட்ட மீன் சின்னங்கள் சிலையை மீண்டும் ரயில் நிலையத்தில் வைக்க மேண்டும் என இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடுத்தார், அவ்வழக்கு விசாரணையில் ரயில் நிலைய வளாகத்தில் மீன்கள் சிலையை வைக்க முடியாது என ரயில்வே நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது, இதனையடுத்து மதுரையில் மீன்கள் சிலையை எங்கே வைக்கலாம் என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் காந்தி தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழுவை நிய மித்தது, அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆனையர் பீரவீன் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் மேயர் இந்திராணி பொன்.வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் கே.ராஜு, மு. பூமிநாதன், கோ.  தளபதி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன்  மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மதுரை பெரியார் பேருந்து நிலைய பகுதிகளில் வெள்ளியன்று ஆய்வு செய்தனர், பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் உள்ள சுற்றுலாத்துறை வழிகாட்டி மையத்தின் முன் பகுதியில் உள்ள இடத்தில் மீன்கள் சிலை வைக்க பொருத்தமான இடமாக ஆய்வுக் குழு வினர் தேர்வு செய்தனர்,  இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில் “மீன்கள் சிலை வைக்க பெரியார் பேருந்து நிலைய சந்திப்பு பொருத்தமான இட மாகும், விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் “மதுரையின் பாரம் பரியத்தை பறை சாற்றும் விதமாக மீன்கள் சிலை இருந்தது, மக்கள் பிரதிநிதிகள் ஒருமித்த கருத்துடன் பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் மீன்கள் சிலை வைக்க தேர்வு செய்யப்பட்டது” என்றார்.