districts

img

கட்டுமானத் தொழிலாளர் சங்க வெள்ளி விழாக் கொண்டாட்டம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 19- இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் திருவில்லி புத்தூர் நகர் சீனியாபுரம் கிளை தொடங்கி 25-ஆவது ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து வெள்ளிவிழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா திரு வில்லிபுத்தூரில் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 10, 12  ஆம் வகுப்பில் முதல் இரண்டு இடங்கள் பெற்றவர்கள் மற்றும் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். நிகழ்விற்கு நகர் செயலாளர் மரிய டேவிட் தலைமை  வகித்தார். வார்டு உறுப்பினர் லூர்து மெர்சியா முன்னிலை  வகித்தார். கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் டி.குமார், சிஐடியு மாவட்டப் பொதுச்  செயலாளர் பி.என்.தேவா உள்ளிட்டோர் கருத்துரை யாற்றினர்.  அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.எம்.மாரியப்பன்,  மாவட்டப் பொதுச் செயலாளர் ராமர், சாலைப்போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச்செயலாளர் திருமலை, சேவியர் பிரபு, அமல்ராஜ், ஜோதி, சோபனா ரெபேக்காள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.