அருப்புக்கோட்டை, மார்ச்.25- விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் உள்ள திருநகரத்தில் நகர் மன்ற உறுப்பினரின் தகவல் தொடர்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 16 ஆவது வார்டு பகுதியான திருநகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர்மன்ற உறுப்பினரின் தகவல் தொடர்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ். கே. பெரியசாமி தலைமை ஏற்றார். சிஐடியு தலைவர்கள் தமிழ்செல்வராஜ், ஜி. திருப்பதி ஆகியார் முன்னிலை வகித்தனர். நகர்க்குழு செய லாளர் எஸ். காத்தமுத்து வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கே. அர்ச்சுணன் மையத்தை திறந்து வைத்தார். கட்சி கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். தாமஸ் ஏற்றி வைத்தார். தகவல் பலகை யை கே. குருசாமி திறந்து வைத்தார். பின்பு, மருத்துவர் சிவக்குமார் தலைமை யில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் இதில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஜெயபாத், எஸ் பூங்கோதை, ஒன்றிய செயலாளர் செயலா ளர் எம். கணேசன், காமாட்சிநாதன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.