தேனி ,செப்.19- தேனி மாவட்டம் மயிலாடும்பாறையி லிருந்து வீரபாண்டி அரசு கலைக் கல்லூரி க்கு தப்புக்குண்டு மார்க்கமாக அரசுப் பேருந்தை தங்கு தடையின்றி இயக்க வேண்டும் என அந்தப் பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவிகள் தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரனை சந்தித்து மனு அளித் தனர். அவர்கள் அளித்த மனு விபரம் ; வீரபாண்டி அரசு கலைக் கல்லூரியில் 36 மாணவிகள் ,75 மாணவர்கள் படித்து வரு கிறார்கள். அரசுப் பேருந்தை நம்பித் தான் செல்கிறோம். வாரத்தில் மூன்று நாட்கள் பேருந்து பழுது ஏற்பட்டு வருவதில்லை. மற்ற நாட்களில் ஓட்டுநர் இல்லை எனக் கூறி பேருந்து வருவதில்லை. இதனால் கல்லூரிக்குச் செல்ல உப்பார்பட்டி விலக்கிலிருத்து மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் வேறு பேருந்து இயக்கப்படவில்லை. பேருந்து வராத நாட்களில் கல்லூரிக்கு மாணவர்கள் செல்ல முடியவில்லை. கல்லூரி மாணவர்-மாணவிகள் நலன் கருதி அரசுப் பேருந்தை இயக்க நடவ டிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் தெரி வித்துள்ளனர்.