தேனி, ஜூன் 19- தேனி வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தேனி வட்டாட்சியர் அலுவலகம், உழவர் சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம், ஒழுங்குமுறை விற்பனை கூடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கள்ளர் நடுநிலைப் பள்ளி மற்றும் இதர பணிகளின் செயல்பாடு கள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தோட்டக்கலைத் துறையின் சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.1,47,715 மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு நுண்ணீர் பாசனம் அமைப்ப தற்கான பணி ஆணையினையும், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.12,000 மதிப்பிலான தக்காளி குழித்தட்டு நாற்றுகளை ஒரு பயனாளிக்கும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6000 மதிப்பிலான தென்னங்கன்றுகள் ஒரு பயனாளிக்கும் என மொத்தம் 3 பய னாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி னார். பின்னர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தேனி உழவர் சந்தையில் சேதமடைந்த நிலையிலுள்ள சுற்றுச் சுவரினை உட னடியாக சரிசெய்திடுமாறு வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தேனி உழவர் சந்தை அருகில் உள்ள மீறு சமுத்திர கண்மாயினை பார்வையிட்டு, தூர் வாரும் பணிகள் மற்றும் கண்மாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அலு வலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரை யாடினார். பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர் மாண வர்களுடன் தரையில் அமர்ந்து மதிய உண வருந்தினார். இந்நிகழ்வுகளில் துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) விவேக்குமார் பிரசாந்த் யாதவ், மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், உதவி வன அலுவலர் அரவிந்த், திட்ட இயக்குநர்கள் அபிதா ஹனீப் (ஊரக வளர்ச்சி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.