சிவகங்கை நகராட்சி அலுவலக வளாகத்தில் மகிழம் நூலகத்தை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமை வகித்தார் நகர்மன்றத் துணைத் தலைவர் கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகரமன்ற ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நகர்மன்ற பொறியாளர் பாண்டீஸ்வரி ,தமிழாசிரியர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.