சென்னை, ஜூன் 20- சென்னையில் மழையால் பாதித்த பகுதிகளை கண்காணிக்க மூத்த அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஞாயிறன்று (ஜூன் 18) விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதி களில் தண்ணீர் தேங்கியது. கோயம் பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி, கிண்டி, வேளச் சேரி, அடையார், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி, அம்பத்தூர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வ தில் கடும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மதியம் வரை மக்கள் சிரமப்பட் டனர். மாலையில் தான் தண்ணீர் வடிந்து நிலைமை சரியானது. முதலமைச்சர் திருவாரூரில் இருந்ததால் சென்னை மழை பாதிப்பை அங்கிருந்த படியே கேட்டு அமைச்சர்களுக்கும் மாந கராட்சி அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார். போர்க்கால அடிப்படையில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அமைச் சர்கள் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச் சந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு ஆகியோர் அதிகாரி களுடன் மழை பாதிப்பு நிலவ ரங்களை பார்வையிட்டு தேவை யான பணிகளை மேற்கொண்டனர். ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று அமைச்சர்கள் மழை பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.