districts

img

மழைக்கால நிவாரணம் வழங்கிட கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூன் 26- உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) பழையகாயல் பகுதி  கிளையின் சார்பாக உப்புத் தொழி லாளர்களுக்கு மழைகால நிவா ரணமாக ரூ. 5,000 உடணடியாக வழங்கப்பட வேண்டும்.உப்புத் தொழிலாளர்களுக்கு தமிழக அர சின் குறைந்தபட்ட சம்பள சட்டத்தின்  படி சம்பளம் வழங்கிட சென்னை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பிணை உடனடியாக அமல்படுத்த வேண் டும். வாரத்தில் 6 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும். தொழி லாளர்களுக்கு சம்பள ரசீது வழங் கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்  கைகளை வலியுறுத்தி பழைய காயல் பேருந்து நிறுத்தம் அருகில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதற்கு உப்புத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்ட துணைத் தலைவர் பன்னீர் தலைமை வகித் தார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலை வர் பேச்சிமுத்து வாழ்த்துரை வழங்கினார். உப்பு தொழிலாளர் சங்கம் சிஐ டியு மாவட்ட தலைவர் பொன்ராஜ், செயல் தலைவர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.ராமசாமி, மாவட்ட செயலாளர் சங்கரன், மாவட்ட பொருளாளர் .மணவாளன் ஆகி யோர் பேசினர், மாவட்ட நிர்வாகி கள் எம்.சுப்பையா, என். பக்கிள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.